ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வெள்ளி, 23 செப்டம்பர், 2022

சூட்சம பயணம் (1)

 

சூட்சமத்தின் பயணத்தில்

பயணிக்கிறேன்

தனியொருவனாக..

சில பூச்சிகளின்

சத்தத்தையும்

சூட்சம வெளிச்சத்தையும் மட்டும்

துணையாகக் கொண்டு...

ஏன் அந்த பயணம் என்று

அங்கே சிலர் கேட்பது

காதில் விழுகிறது..

நான் சொல்லும் பதில்

அவர்கள் செவிகளுக்கு சென்று

சேரவில்லை..

இந்த அபூர்வ பயணத்தில்

நான் காணும் காட்சிகளை

நான் மட்டுமே ரசிக்க முடிகிறது

துணையில்லா இந்த பயணத்தில்

துணையை தேடி அலைவதில்

எந்தவொரு பயனும் இல்லை..

இந்த ஒரு தனி 

பயணத்தின் கதையை

நான் மட்டுமே உங்களுக்கு

விளக்க அனுமதி 

கிடைத்திருக்கிறது..

காத்திருங்கள்..

இன்னும் 

சுவாரசியமான பயணத்தின்

சூட்சமத்திற்காக...

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மர்ம வீடு பாகம் (1)

அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...