ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

திங்கள், 19 செப்டம்பர், 2022

ஊடலின் பிடியில்





ஊடலில் எல்லாம்

நம் காதல்

இதயத்தில் அமைதியாக

எரிகிறது....

நீறுபூத்த நெருப்பு போல..

இருவரில் எவரேனும்

ஒருவர் பேசினாலும் போதும்

 அந்த நெருப்பு தணலாக

பற்றிக் கொள்ளும்

நம் இருவரையும்

காதலின்

பெரும் பிணைப்பின் ஊடாக..

எவர் பேசுவது என்பதின்

தயக்கம் ஊடலின் பிடியில்

சிக்கி தவிக்கிறோம்...

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இத்தனை வன்மமும் எதற்காக??

    என் மீதான  காதல் உணர்வுகளில்  ஒரு வித மையல் கொண்டு என்னை நெருங்காதே... உன் மீதான  என் பெரும் காதலின்  அலையில் நீ அடித்து  சென்று நடுக் க...