ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

புதன், 21 செப்டம்பர், 2022

விடை தெரியா கேள்வி இது


 அந்த இரவின் நிழலில்

ஓய்வெடுக்கிறேன்...

என் கவலைகளை

சுமந்த மனமோ

என்னை மௌனமாக

பார்க்கிறது...

நாளை இவன் நிலை

என்ன என்று...

எப்படியும் விடியலுக்குள்

கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்

கொண்டு பயணிக்க

காத்திருக்கிறேன் நான்...

நிழல் தந்த இரவோ

என்னை விட்டு

விலக மனம் இல்லாமல்

தவிக்கும் போது

அந்த விடியலில்

உதித்த சூரியன்

உற்சாகமாக கை கொடுக்கிறான்...

நீ கவலைக் கொள்ளாதே

நான் இனி அவனுக்கு

வழி துணையாக

என்று...

இரவும் பகலும் மாறி மாறி

பாதுகாத்த நானோ

விடை பெறும் நாளும்

வந்தது..

அப்போது அங்கே

இரவின் நிழலுக்கோ

விடியலில் தோன்றும்

சூரியனுக்கோ

அவசியம் இல்லாமல்

போனது...

அப்போது என் 

கவலைகள் எங்கே

கரைந்து இருக்கும்

விடை தெரியா

கேள்வி இதற்கு

எவரேனும் பதில்

தெரிந்தால் சொல்லுங்கள்..

#இளையவேணிகிருஷ்ணா.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அந்த ஒற்றை மனிதனின் நடமாட்டமும் இல்லாமல்...

  அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில்  என் மனமும் சேர...