ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

செவ்வாய், 2 மே, 2023

திருமணம் எனும் இம்சை

 

உடனடியாக விவாகரத்து வழங்கும் முறையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்து உள்ளது..உச்ச நீதிமன்றத்தின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது..

இங்கே சேர்ந்து வாழவே முடியாது என்று ஆயிரம் ஆயிரம் முறை யோசித்து தான் பல பேர் விவாகரத்து முடிவு எடுக்கிறார்கள்..அவர்களை போய் நீ இன்னும் ஒரு வருடம் சேர்ந்து வாழ்ந்து விட்டு வா என்று சொல்வது முறையல்ல.. இங்கே நீதிமன்றத்தில் கவுன்சிலிங் கொடுத்து மட்டும் எதுவும் மாறப் போவது இல்லை.அது மேலும் அவர்கள் மன காயத்தை தான் அதிகப்படுத்தும்.. மேலும் அரசியல்வாதிகள் ஊழல் செய்து விட்டு வழக்கு என்று வரும் போது வாய்தா வாங்குவது போல அல்ல இது..இது வாழ்க்கை.. நீதிமன்ற படி ஏறி ஏறி காயப்பட்டு மீதி வாழ்க்கையை தொலைத்து விட்டு கண்ணீரோடு வாழ்வின் இறுதி பயணத்தை மேற்கொள்ள வேண்டுமா?

என்னை பொறுத்தவரை இங்கே நமது தர்ம சாஸ்திர விதிப்படியா எல்லாம் இங்கே நமது நாட்டில் நடக்கிறது.. பிறகு ஏன் இந்து திருமண சட்டம் இதை அனுமதிக்கவில்லை அதை அனுமதிக்கவில்லை என்று நீதிமன்றத்தில் மன்றாடுகிறார்கள்? இங்கே தற்போது திருமணம் என்பதே மிகவும் வேடிக்கையான விசயம் தான்... இங்கே பெண்கள் தான் அதிகமாக காயப்படுகிறார்கள்... பலபேர் காயத்தை வெளிக் காட்டிக் கொள்வது இல்லை... இங்கே அரசியல்வாதிகள் வெற்றி பெற தான் நமது குழந்தைகள் உதவுகிறது ஓட்டு எனும் ரூபத்தில்.. வேறு ஒன்றும் பெரிதாக பெரும்பாலும் இல்லை என்று தான் தோன்றுகிறது...

#இன்றையதலையங்கம்.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இரவு சிந்தனை ✨

  அதீத உள் தேடல்,  உங்களை நீங்களே நேசித்தல்,  எதுவாக இருந்தாலும்  பார்த்துக் கொள்ளலாம்  இங்கே இழப்பதற்கு  நம்மிடம் எதுவும் இல்லை என்கின்ற தி...