காலத்தின் சுவைகளில்
நான் எந்த சுவை என்று
தேடியலைந்து தொலையும்
ஒவ்வொரு நொடியிலும்
நான் கைக்கு அருகில்
என் பசி தீர்க்கும் சுவையை
கண்டுக் கொள்ளாமலேயே
பயணிக்கும் கொடுமையை
காலத்தை தவிர
யார் அறியக் கூடும்?
#இளையவேணிகிருஷ்ணா.
அதீத உள் தேடல், உங்களை நீங்களே நேசித்தல், எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் இங்கே இழப்பதற்கு நம்மிடம் எதுவும் இல்லை என்கின்ற தி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக