ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

செவ்வாய், 2 மே, 2023

திருமண பந்தம்

 


தவறொன்றும் இல்லை... எவ்வளவு பேர் மன உளைச்சலில் இருக்கிறார்கள்...வாய்தா வாய்தா என்று பாவம்... சொல்ல முடியாத துயரத்தை தான் கொடுத்து இருக்கிறது பலபேரின் வாழ்வில்... இதனால் இன்னொரு பிறவியில் கூட அவர்களால் மறக்கவே முடியாது..திருமண பந்தம் மோசமானது என்று...

இங்கே தற்போது பல பெண்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள் திருமண பந்தத்தில் நுழைய தேவையே இல்லை என்று... அது ஏன் என்றால் அந்தளவுக்கு தற்போது விஞ்ஞான வளர்ச்சியிலும் குடும்ப அமைப்பில் அதே சிக்கல் தான்... மாமியார் நாத்தனார் இவர்களின் இயல்பு மட்டும் யுகம் மாறினாலும் மாறாது... அதனால் தான் அதை உணர்ந்து திருமண பந்தத்தை தவிர்க்கிறார்கள் இந்த காலத்தில் சில பெண்கள்.. வலுக்கட்டாயமாக திருமண பந்தத்தில் நுழைந்து எதற்காக அவஸ்தை பட வேண்டும் என்று...

நமது குடும்ப அமைப்பு சிதறி பல வருடங்கள் ஆகிறது.. இங்கே வாழ்வியலை மேலும் மேலும் சிக்கலாக்கிக் கொண்டு போக எண்ணம் இல்லாதவர்கள் கொஞ்சம் தனித்துவமாக வாழ நினைக்கிறவர்கள் திருமண பந்தத்தில் இணைவதில் பற்றி ஆயிரம் முறை யோசிக்கிறார்கள்... இது காலத்தின் கட்டாயம் என்று கூட எடுத்துக் கொள்ளலாம்..

#இன்றையதலையங்கம்.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இரவு சிந்தனை ✨

  அதீத உள் தேடல்,  உங்களை நீங்களே நேசித்தல்,  எதுவாக இருந்தாலும்  பார்த்துக் கொள்ளலாம்  இங்கே இழப்பதற்கு  நம்மிடம் எதுவும் இல்லை என்கின்ற தி...