ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

புதன், 24 மே, 2023

சலிப்பு என்னை தழுவி...

 


வாழ்வின் அத்தனை விசயங்களும் முடிந்தது...

இனி இருக்கும் நாட்கள் எதற்காக என்று கேள்வி கணைகள் மட்டும் விட்டு விடாமல் என்னை துரத்துகிறது...

காலமோ கொஞ்சம் பொறு

உனக்கான சுவாரஸ்யமே இனிதான் என்கிறது

ஒரு பக்கம்...

அட சலிப்பு மேலோங்கி

நான் ஏதேனும் செய்துக் கொள்வதற்குள்

அந்த சுவாரஸ்யத்தை என் கண் முன்னே நிறுத்தி விட்டு

உன் போக்கில் நீ பயணி காலமே என்கிறேன்...

அதுவோ ஒரு பயங்கர சிரிப்பை மட்டும் போற போக்கில் உதிர்த்து விட்டு

குதிரை 🐎 வேகத்தில் பயணிக்கிறது...

நானோ இங்கே அநாதையாக தவிக்கிறேன்..

#இரவுகவிதை..

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாலையோர புழுதியில் நனைந்த ஓவியம்...

 அந்த பிரமாண்டமான வீட்டில்  வாழ்ந்து கொண்டு  இருப்பவர் சில நாட்களில்  உற்சாகம் இழந்து  அவர் தாம் பார்த்து பார்த்து கட்டிய  அந்த வீட்டில்  உள...