ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

சனி, 27 மே, 2023

நானும் எமனும்

 


நான் குலுங்கி குலுங்கி அழுவதை பார்த்து எமன் அப்படி யார் அழைத்தும்

நான் வந்தது இல்லை..நீ அழைத்து என்னால் மறுப்பு சொல்ல முடியவில்லை.. ஏன் என்னோடு வர பயமா.. அப்படி என்றால் சென்று விடுகிறேன்... இந்த தளர்வும் உனக்காக தான்.. என்கிறான்.. அப்படி இல்லை.. தங்களோடு வருவதில் ஓர் சிக்கல்.. உங்களோடு வந்தால் அந்த பயணம் சிறு இளைப்பாறுதல் அப்படிதானே என்றேன்.. ஆமாம்.. அப்படி தான் என்றான் எமன்.. அதுதான் எனக்கு பயத்தை கொடுக்கிறது என்றேன்.. அப்படியா ஏன் என்றான் எமன்.. இன்னும் எத்தனை எத்தனை பிறவியோ தெரியவில்லை.. நான் இந்த ஒரே பிறவியில் எல்லா வினைகளையும் அனுபவித்து பிறவிக்கு ஓர் முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.. இந்த வாழ்தலின் நீட்சி அது எத்தனை யுகமாக இருந்தாலும் பரவாயில்லை.. நான் இங்கே பயணிக்க தயார்.. ஆனால் இந்த ஓர் பிறவியில் எல்லாம் முடிந்து விட வேண்டும்.. என்றேன்.. அப்படி ஓர் வரத்தை கொடுங்கள் தர்மராஜா என்றேன்...

எமனோ எனது வரத்தை கேட்டு சற்றே நடுநடுங்கி பின் வாங்கி சொல்கிறான்..அதை என்னால் தர இயலாது .. இப்போது நீ வருகிறாயா இல்லையா என்றான்..

நானோ கொஞ்சம் தயங்கி பின் சுதாரித்து நீங்கள் செல்லுங்கள்.. இங்கே ஓர் தவம் எனக்கு பாக்கி இருக்கிறது.. முடித்து விட்டு வருகிறேன் என்றேன்..

எமனோ எனது தவத்தை பற்றி யோசனையோடே எமலோகம் செல்கிறான்...

நான் அந்த பிறவியற்ற நிலையை அடைய கடும் தவத்தில் ஆழ்ந்தேன்...

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இரவு சிந்தனை ✨

  அதீத உள் தேடல்,  உங்களை நீங்களே நேசித்தல்,  எதுவாக இருந்தாலும்  பார்த்துக் கொள்ளலாம்  இங்கே இழப்பதற்கு  நம்மிடம் எதுவும் இல்லை என்கின்ற தி...