ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

ஞாயிறு, 14 மே, 2023

புத்தரின் வைராக்கியம்

 


புத்த பூர்ணிமா வில் புத்தரை பற்றிய ஓர் பார்வை:-

இங்கே சமூக வலைத்தளங்களில் எனது கண்ணில் அடிக்கடி படும் ஓர் விசயம் புத்தர் தனது மனைவியை தவிக்க விட்டு விட்டு சுயநலமாக சென்று விட்டார் என்று.. இங்கே ஓர் விசயத்தை நீங்கள் கவனிக்க வேண்டும்.. இராமானுஜர் வாழ்வும் இதே கதை தான்.. ஆனால் இராமானுஜருக்கு குழந்தை இல்லை.. புத்தருக்கு குழந்தை இருக்கிறது.. சரி அதை வைத்தே கூட இங்கே விவாதிக்கலாம்.. ஓர் பச்சிளம் குழந்தையை மிகவும் அழகான மனைவியை விட்டு விட்டு ஞானத்தை தேடி ஓர் பயணம் எல்லோருக்கும் சாத்தியமா என்று கேள்வி உங்களுக்குள்ளேயே கேட்டு பாருங்கள்.. அதற்கு எந்தளவுக்கு வைராக்கியம் இருந்து இருக்க வேண்டும் என்று யோசித்து பாருங்கள்..

ஓர் ஆத்ம ஞானத்தை தேடி ஓர் பயணம் என்பது அவ்வளவு எளிதாக எல்லோருக்கும் வந்து விடாது.. அந்த வைராக்கியம் வருவதற்கு ஓர் ஆழ்ந்த ஞானம் வேண்டும்.. அந்த ஞானம் எல்லோருக்கும் இங்கே இருக்கிறதா..

ஓர் குழந்தை மேல் அவ்வளவு எளிதாக பற்றை விட்டு விட முடியுமா?? நீங்களே கேட்டு கொள்ளுங்கள்..இதை உங்களால் நிகழ்த்த முடிந்து அதற்கு பின் புத்தரை விமர்சனம் செய்யுங்கள்.. அதற்கு பின் உங்களால் விமர்சனம் செய்ய இயலாது.. ஏனெனில் நீங்கள் ஆழ்ந்த ஞானத்தில் அமிழ்ந்து விடுவீர்கள்..

இங்கே ஓர் அவதார புருஷனுக்கு என்று சில லட்சணங்கள் இறைவனால் கொடுக்கப்பட்ட உள்ளது.. அந்த லட்சணங்களை நீங்கள் முடிந்தால் முயற்சி செய்யுங்கள்..அதை விடுத்து புத்தரை விமர்சனம் செய்யாதீர்கள்.. அப்படி விமர்சனம் செய்து தான் நீங்கள் பெரிய ஆள் என்று காட்டிக் கொள்ள வேண்டும் என்பது இல்லை.. அதற்கு பல வழிகள் உள்ளது..

மீண்டும் மீண்டும் புத்தரை இனியேனும் விமர்சனம் செய்யாதீர்கள்..

#புத்தர்எனும்சித்தார்த்தன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இரவு சிந்தனை ✨

  அதீத உள் தேடல்,  உங்களை நீங்களே நேசித்தல்,  எதுவாக இருந்தாலும்  பார்த்துக் கொள்ளலாம்  இங்கே இழப்பதற்கு  நம்மிடம் எதுவும் இல்லை என்கின்ற தி...