ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

புதன், 17 மே, 2023

நினைவலைகள்

 


என்றாவது நீங்கள் எதிர் காற்று வீசும்போது மிதிவண்டியை ஓட்டி இருக்கிறீர்களா? நான் பள்ளி காலத்தில் போக ஏழு கிலோமீட்டர் வர ஏழு கிலோமீட்டர் மொத்தம் பதினான்கு கிலோமீட்டர் ஏழாம் வகுப்பில் இருந்து பனிரெண்டாம் வகுப்பு வரை பயணித்து இருக்கிறேன்.. இதில் பள்ளி இறுதி ஆண்டு விடுமுறை முடிந்து பள்ளி ஆரம்பித்து சில நாட்களில் காற்று காலம் வரும்.. போகும் போது காற்றே நம்மை தள்ளி சென்று விடும்.. ஆனால் பெரும்பாலும் காற்று வீசாது.. ஆனால் பள்ளி முடியும் நேரத்தில் காற்று வீச தொடங்கி வீடு வரும் வரை இதே நிலை தான்.. நான்கு ஐந்து பெடல் வேகமாக போட்டால் தான் வண்டி சாயாமல் நிற்கவாவது செய்யும்.. கண்களில் கண்ணீரோடு மூச்சு வாங்கி கீழே இறங்கி அதை தள்ள முடியாமல் கொஞ்ச நேரம் தள்ளி காற்று சில நிமிடங்கள் அடங்கிய போது வண்டியில் ஏறி பெடலை வேகமாக மிதித்து வீடு போய் சேர்ந்த அந்த காலத்தை இப்போது நினைத்து பார்க்கிறேன்.இப்போது எனக்கு நானே கேள்வி கேட்டுக் கொள்கிறேன் அந்த துன்பத்தை எதிர் கொண்ட உனக்கு இப்போது என்ன ஆனது? அந்த வலியை உணர்ந்தவர்களுக்கு தெரியும் வாழ்க்கையின் வலி என்ன என்று...

குறிப்பு:-இப்போதெல்லாம் அந்த காற்றை காணவில்லை.. ஒரு வேலை இப்போது அதை எதிர்க்கொள்ளும் அளவுக்கு சைக்கிள் ஓட்டுபவர்கள் இல்லை என்பதாக கூட இருக்கலாம்.யார் கண்டது காலத்தின் கணக்குகளை?

#நினைவலைகள்

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இரவு சிந்தனை ✨

  அதீத உள் தேடல்,  உங்களை நீங்களே நேசித்தல்,  எதுவாக இருந்தாலும்  பார்த்துக் கொள்ளலாம்  இங்கே இழப்பதற்கு  நம்மிடம் எதுவும் இல்லை என்கின்ற தி...