ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 18 மே, 2023

அன்பு

 


அன்பர்களே வணக்கம்.

            இன்று அடுத்து நாம் பார்க்க இருப்பது அன்பு.வேகமாக ஓடும் இந்த காலகட்டத்தில் அன்பு என்று ஒன்று உள்ளதா என்று கேட்கிறீர்களா.அதுவும் சரிதான்.

      நாம் நம் குடும்ப உறுப்பினர்களுக்காக ஓடுகிறோம் ஓடுகிறோம் ஓடிக்கொண்டே இருக்கிறோம். ஆனால் அவர்கள் தேவை என்னவென்று தெரியாமலே ஓடிக்கொண்டே இருக்கிறோம். அவர்கள் ஒரு வார்த்தை சொல்லி அவர்கள் தேவை என்ன என்று புரிய வைப்பதற்குள் நாம் பாதி தூரம் கடந்து விடுகிறோம். அவர்கள் காற்றோடு பேசிக்கொண்டு இருக்கும் பரிதாபத்தைக்கூட நாம் புரிந்து கொள்ள இயலாமல்.

          என்றோவொரு நாள் நமக்கு நேரம் கிடைக்கும் போது நம் அன்பை மொத்தமாக வெளிப்படுத்திக்கொள்ளலாம் என்று விட்டு விடுவோம். நாம் வெளிப்படுத்தாமலே அவர்கள் நம்மை விட்டு சென்று விடலாம் அல்லது இவ்வுலகை விட்டே போய் விடலாம். அப்போது நாம் அடுத்தவர்களிடம் தான் சொல்லி புலம்ப வேண்டி வரும். இந்த நிலை தேவையா.

       குடும்ப உறுப்பினர்கள் உங்களிடம் வேண்டுவது பொருளை அல்ல. அவர்களுக்கு நீங்கள் எவ்வளவு விலையுயர்ந்த பொருளை கொடுத்தாலும் கொஞ்ச நாட்கள் தான். பிறகு அவர்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது அன்பைதான்.

       அந்த அன்பு ஒன்றை கொடுத்து அவர்கள் மனதில் இடம் பிடியுங்கள். அன்பை உள்ளே சேர்த்து வைக்காதீர்கள். உள்ளே போட்டு போட்டு மறைக்காதீர்கள்.உங்களை நேசிப்பவர்களிடம் வெளிப்படுத்துங்கள்.அதுவே அவர்களுக்கும் உங்களுக்கும் பலம்.

       அன்பை உணர்வுகளால் வெளிப்படுத்துங்கள்.பொருட்களால் அல்ல.பரிசுப்பொருட்களை குப்பை போல சேகரிப்பதால் எந்த பிரயோஜனமும் இல்லை. உணர்வுகளால் வெளிப்படும் அன்பே இறுதி வரை வெல்லும். அதுவே கடைசி வரை கூட வரும். பரிசு பொருட்களால் வரும் அன்பு சில காலம் மட்டுமே பயன் அளிக்கும். எதிர்பார்ப்பில்லாமல் செலுத்தும் அன்பிற்கு வலிமை அதிகம்.

    ஆனந்தத்தை அனபெனும் உணர்வே கொடுக்கும். வாருங்கள் அனபர்களே அன்பால் ஆட்பட்டு கிடப்போம்.அன்பால் அனைவரையும் வெல்வோம்.🌹🌹🌹🌹🌹

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இரவு சிந்தனை ✨

  அதீத உள் தேடல்,  உங்களை நீங்களே நேசித்தல்,  எதுவாக இருந்தாலும்  பார்த்துக் கொள்ளலாம்  இங்கே இழப்பதற்கு  நம்மிடம் எதுவும் இல்லை என்கின்ற தி...