ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

திங்கள், 28 நவம்பர், 2022

நதியும் நானும்

 

சிறு நதி போல

நகர்கிறேன்...

நகரும் தொலைவில்

எங்கே தொலைந்தேன் என்று யோசிக்கிறேன்...

இங்கே எவரும் நதியின் போக்கை பற்றி

கவலைப்படாதபோது

நான் அதில் மூழ்கி

சுவாரஸ்யமான நிகழ்வொன்றை நடத்த

சாத்தியமாயிற்று...

இங்கே போக்கிடத்தை பற்றி

கவலைக் கொள்ளாமல்

பயணிப்பது ஒரு சுகம்..

எனக்கும் நதிக்கும்

அது பழக்கம்...

எத்தனை கசடுகளை

நாங்கள் சுமந்த போதும்

போகிற போக்கில்

வீசி எறிந்து விட

கரையொன்று அங்கே உண்டு...

சுமையற்ற பயணிகளாக

நானும் அந்த நதியும்

நெடுந்தூரம் பயணிப்போம்

இங்கே எவரும் 

கண்டுக் கொள்ளாமல் 

இருப்பது எங்களுக்கு

நிம்மதியாக போயிற்று...

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒரு நகரத்தின் பரபரப்புகளுக்கிடையே பறக்கும் பட்டாம்பூச்சியாக...

என் உயிர் சுவாசத்தின்  தீண்டலாக  நீ என்னோடு  ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின்  பரபரப்புக்குகளுக்கிடையே ...