அந்த நடுத்தர வயது வங்கி வாடிக்கையாளர் ஒருவர் பணம் ஐநூறு ரூபாய் சலானில் எழுதிக் கொண்டு செல்கிறார்.. அங்கே கேஷியர் அவர் கணக்கை பரிசோதித்து விட்டு உங்கள் கணக்கில் ஐநூறு ரூபாய் சற்று முன்பு வரை இருந்தது.. இப்போது உங்கள் கணக்கில் இருந்து சில கட்டணங்களுக்காக வங்கி எடுத்துக் கொண்டது.. இன்னும் இருநூறு ரூபாய் நீங்கள் கட்டி விட்டு போங்கள் என்று சொன்னார்.. வாடிக்கையாளர் அந்த கணக்கை அப்படியே வைத்திருங்கள்..இனி இந்த கணக்கில் நான் பணத்தை போட போவதில்லை..வேறொரு கணக்கை வேறொரு வங்கியில் துவங்க போகிறேன் என்றார்.. அங்கேயும் இதே விதி தான் இருக்கும் என்றார் வங்கி கேஷியர்.. பரவாயில்லை... நான் அங்கே தொடங்கிக் கொள்கிறேன் என்றார் பிடிவாதமாக..அப்பொழுது இந்த கணக்கின் அபராதம் எப்போது செலுத்துவீர்கள் என்று கேட்டார்.. அது வரை பொறுமையாக பதில் அளித்து வந்தவர் இந்த கணக்கின் அபராதம் தானே அடுத்து வரும் எனது ஏழாவது ஜென்மத்தில் செலுத்துவேன் போ ஐயா என்று வேக வேகமாக வங்கியை விட்டு வெளியே வந்து விட்டார்.. அந்த நாட்டு நடப்பின் சாயல் எதுவும் படியாத நடத்தர வயது முதியவர்...#வங்கிஅலப்பறைகளும்#வங்கிவாடிக்கையாளர்களின் #அவஸ்தையும்.#இளையவேணிகிருஷ்ணா.
ஆனந்தமாக வாழுங்கள்
வாழ்க்கை பற்றிய புரிதல்
திங்கள், 21 நவம்பர், 2022
ஒன்றும் அறியாத வங்கி வாடிக்கையாளர் அவஸ்தை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
அந்த ஒற்றை மனிதனின் நடமாட்டமும் இல்லாமல்...
அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில் என் மனமும் சேர...
-
விடை தெரியா கேள்வி ஒன்று பல யுகங்களாக இங்கும் அங்கும் அலைந்து திரிந்து கொண்டு இருக்கிறது என்னுள்ளே... ஒவ்வொரு முறையும் இந்த பூமியில் ந...
-
ஆயிரம் ஆயிரம் ஒன்றுக்கும் பிரயோஜனம் இல்லாத கேள்விகளால் இந்த உலகம் எனை ஆக்கிரமிக்கும் பொழுது நான் என்ன விடை பகிர்ந்து விட போகிறேன் என்...
-
வேறு எதுவும் அடைக்கலம் கிடைக்கவில்லை என்று உறுதி செய்து சோர்ந்து அமரும் தருணத்தில் அந்த பெரும் துயரத்தின் மரத்தின் நிழலொன்று அடைக்கலம் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக