ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

செவ்வாய், 15 நவம்பர், 2022

அந்த பேரொளியின் தாபம்


 அந்த பேரொளியின்

தன்னலம் இல்லாத

வெளிச்சத்தில் மகிழ்ந்து

கொண்டாடி தீர்ந்த நொடியில்

அதன் தாபத்தை இங்கே

அடுத்து வந்த நொடியில்

புரிந்துக் கொண்டு

ஆழ்ந்த அமைதியில்

மௌனமாக கண்ணீர்

வடித்து கடந்து செல்கிறேன்..

என் கண்ணீருக்கு இங்கே

காதல் என்று போவோர் வருவோர்

சொல்லி செல்வதை பார்த்து

பலமாக சிரித்து வேகமாக

கடந்து செல்கிறேன் லாவகமாக 

அந்த தாபத்தை மட்டும்

எவருக்கும் சொல்லாமல்..

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒரு நகரத்தின் பரபரப்புகளுக்கிடையே பறக்கும் பட்டாம்பூச்சியாக...

என் உயிர் சுவாசத்தின்  தீண்டலாக  நீ என்னோடு  ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின்  பரபரப்புக்குகளுக்கிடையே ...