ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வெள்ளி, 11 நவம்பர், 2022

மனித மனநிலையின் குரூரம்

 


காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல இயலாததால் பல கோடி ரூபாய் வருமான இழப்பு என்று இன்று மாலை சன் தொலைக்காட்சி செய்தியில் வாசிக்கப்பட்டது அந்த செய்தி தயாரிப்பாளரின் குரூர தன்மையையே காட்டுகிறது.. இங்கே அந்த மழை நாளில் அவர்கள் பசியை பற்றி யோசிக்க தெரியாத மனிதர்கள் மனித வடிவில் இருக்கும் வேறொரு ஜீவ ராசி என்று தான் சொல்ல தோன்றுகிறது..

பொருளாதாரமயமாக்கலின் தாக்கத்தை இன்னும் கொஞ்சம் காலத்தில் மோசமான விளைவுகளை அனுபவிக்க போகிறார்கள் உலக நாடுகள்...

பசியின் தீவிரத்தை உணர தெரியாத வரை இங்கே மனிதர்கள் எல்லாம் மனிதர்களாக நடமாட போவதில்லை..

அந்த செய்தி இப்படி வந்து இருக்க வேண்டும்..

காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.. அவர்கள் அன்றாட பசியை போக்க அரசாங்கம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது என்று அந்த செய்தி தயாரிப்பு இருந்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்..

தற்போது செய்திகள் எல்லாம் பெரும்பாலும் குரூரத் தன்மையை வெளிப்படுத்தும் விதமாகவே தயாரிக்கப்படுவது வேதனையின் உச்சம்..

#செய்திகளின் #குரூரம்

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அந்த ஒற்றை மனிதனின் நடமாட்டமும் இல்லாமல்...

  அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில்  என் மனமும் சேர...