ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

செவ்வாய், 8 நவம்பர், 2022

அந்த மழைக் கால மாலைநேரத்தில்


அந்த மாலை நேரத்தில்

அமைதியாக அமர்ந்து இருக்கிறேன்

சும்மா போவோர் வருவோரை

வேடிக்கை பார்த்து

என்னை கடந்து சென்றவர் 

ஏதோ நினைவு வந்ததை போல 

என்னருகே வந்து 

நீங்கள் 

எமனை பார்த்து இருக்கிறீர்களா 

என்று கேட்டார்.

நானோ அவரை ஆச்சரியமாக பார்த்து

ஏன் பார்க்காமல் 

இதோ இப்போது கூட

அவர் அணைப்பில் தான் 

இருக்கிறேன்

அவரோடு காதலோடு 

செல்லவும் முடியாமல்

அவரிடமிருந்து 

விலகவும் முடியாமல்

தவிக்கும் தவிப்பை 

நீங்கள் அறிய மாட்டீர்கள் 

என்றேன்.. 

அவர் என்னை 

ஒரு மாதிரி பார்த்து விட்டு

சென்று விட்டார் 

ஒரு வித யோசனையோடே..

நான் என்ன செய்ய இயலும்?😌

#இளையவேணிகிருஷ்ணா.

2 கருத்துகள்:

போர் நிறுத்தம்...

   இத்தனை நாள் தூரமாக நின்று  வேடிக்கை பார்த்த  அமைதி  இன்று எந்த தயக்கமும்  இல்லாமல் என் கைகளில்  வேகமாக ஓடி வந்து  பேரன்பு கொண்டு  என்னை ...