ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

புதன், 23 நவம்பர், 2022

யாசித்தல் கொடுமையானது


 யாசித்தல் கொடுமையானது

அதிலும் இறப்பை யாசித்து கிடப்பது மிகவும் மோசமான துன்பமான விசயம்.. அந்த அகங்காரம் கொண்ட மனிதனின் அகங்காரம் கொஞ்சம் கொஞ்சமாக சரணடைகிறது இறப்பிடம்.. இறப்பின் காலடியை பிடித்து கெஞ்சுகிறது..என்னை உன் காலடி நிழலில் அடைக்கலம் ஆக்கிக் கொள் என்று.. பார்க்க பாவமாக இருந்தது.. ஆனால் இறப்பு அவரை கண்டுக் கொள்ளவே இல்லை..நீ இதே நிலையில் இன்னும் கொஞ்ச காலம் இருக்க வேண்டும்.. என் காலடியை உனது கண்ணீர் கழுவ வேண்டும்.. ஒவ்வொரு நொடியும் அகங்காரம் எவ்வளவு மோசமானது என்று நீ உணர வேண்டும்.. பிறகு அடுத்த பிறவியில் கூட உன்னை அகங்காரம் சூழாமல் இருக்க வேண்டும்... இதற்காக தான் இந்த தண்டனை..யாசித்துக் கொண்டே இரு.. நான் நீ கேட்ட யாசித்தலை நேரம் வரும் போது தருவேன்..

யாசித்தல் கொடுமையானது தான்..உன்னை போன்றவர்கள் உணர வேண்டாமா என்றது காலன்..

அந்த அகங்கார மனிதனோ கண்ணீர் சிந்தி சிந்தி காலனின் காலடியில் மயங்கி கிடக்கிறான்..நலனுக்கான நேரத்திற்காக...

#யாசித்தல்கொடுமையானது..

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விடை தெரியா கேள்வி ஒன்று...

  விடை தெரியா கேள்வி ஒன்று  பல யுகங்களாக இங்கும் அங்கும்  அலைந்து திரிந்து கொண்டு  இருக்கிறது என்னுள்ளே... ஒவ்வொரு முறையும் இந்த பூமியில்  ந...