ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

திங்கள், 14 நவம்பர், 2022

என் இதயத்தின் காதல் ஒலி


 ஓ அன்பே

நான் தனியாய்

தன்னிரக்கத்துடன்

உன் நினைவுகளில்

கனவை காற்றாய்

சுமந்து சுழலவிடுகிறேன்

என் விழிகளை

உன்னை எதிர்பார்த்து

ஊன்உறக்கம் இல்லை

உன்னை எதிர்பார்த்து

காற்றை மட்டும்

உணவாய் புசித்து

உலவுகிறேன்

உன்னை காண

அதோ அங்கு

தெரிவது நீதானா

அலைகிறது

என் மனம்

அந்தோ பரிதாபம்

அது நீயில்லை

மௌனமாய்

அழுகிறேன்

என் அழுகை

அங்கே உணர்கிறாயா

திடிரென்று

பறவைகளின் ஒலி

வரும் திசையை

பார்க்கிறேன்

பித்துபிடித்ததுப்போல்

நீதானோ என்று

இல்லை நீ

அங்கில்லை

என்றோவொருநாள்

என் இதயத்தின்

காதல் ஒலியை

கேட்டு

அனைத்தையும்

கடந்து வரும்

நாளை நோக்கி

நம்பிக்கையுடன்

நான் என் உயிரே!

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாலையோர புழுதியில் நனைந்த ஓவியம்...

 அந்த பிரமாண்டமான வீட்டில்  வாழ்ந்து கொண்டு  இருப்பவர் சில நாட்களில்  உற்சாகம் இழந்து  அவர் தாம் பார்த்து பார்த்து கட்டிய  அந்த வீட்டில்  உள...