அந்த நடுத்தர வயது வங்கி வாடிக்கையாளர் ஒருவர் பணம் ஐநூறு ரூபாய் சலானில் எழுதிக் கொண்டு செல்கிறார்.. அங்கே கேஷியர் அவர் கணக்கை பரிசோதித்து விட்டு உங்கள் கணக்கில் ஐநூறு ரூபாய் சற்று முன்பு வரை இருந்தது.. இப்போது உங்கள் கணக்கில் இருந்து சில கட்டணங்களுக்காக வங்கி எடுத்துக் கொண்டது.. இன்னும் இருநூறு ரூபாய் நீங்கள் கட்டி விட்டு போங்கள் என்று சொன்னார்.. வாடிக்கையாளர் அந்த கணக்கை அப்படியே வைத்திருங்கள்..இனி இந்த கணக்கில் நான் பணத்தை போட போவதில்லை..வேறொரு கணக்கை வேறொரு வங்கியில் துவங்க போகிறேன் என்றார்.. அங்கேயும் இதே விதி தான் இருக்கும் என்றார் வங்கி கேஷியர்.. பரவாயில்லை... நான் அங்கே தொடங்கிக் கொள்கிறேன் என்றார் பிடிவாதமாக..அப்பொழுது இந்த கணக்கின் அபராதம் எப்போது செலுத்துவீர்கள் என்று கேட்டார்.. அது வரை பொறுமையாக பதில் அளித்து வந்தவர் இந்த கணக்கின் அபராதம் தானே அடுத்து வரும் எனது ஏழாவது ஜென்மத்தில் செலுத்துவேன் போ ஐயா என்று வேக வேகமாக வங்கியை விட்டு வெளியே வந்து விட்டார்.. அந்த நாட்டு நடப்பின் சாயல் எதுவும் படியாத நடத்தர வயது முதியவர்...#வங்கிஅலப்பறைகளும்#வங்கிவாடிக்கையாளர்களின் #அவஸ்தையும்.#இளையவேணிகிருஷ்ணா.
ஆனந்தமாக வாழுங்கள்
வாழ்க்கை பற்றிய புரிதல்
திங்கள், 21 நவம்பர், 2022
ஒன்றும் அறியாத வங்கி வாடிக்கையாளர் அவஸ்தை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சாலையோர புழுதியில் நனைந்த ஓவியம்...
அந்த பிரமாண்டமான வீட்டில் வாழ்ந்து கொண்டு இருப்பவர் சில நாட்களில் உற்சாகம் இழந்து அவர் தாம் பார்த்து பார்த்து கட்டிய அந்த வீட்டில் உள...
-
எத்தனையோ சலசலப்பான நகர்வுகளுக்கு மத்தியில் ஒரு புழுதியென அங்கே பறந்து காலமெனும் வெளியில் கலக்கிறேன்... இங்கே எனக்கென்று ஒரு அடையாளம் ...
-
என்னை நானே அறியாமல் மிகவும் கூர்மையான பார்வையால் உற்று பார்க்கிறது என் வீடு.. நான் என்னை மறந்து பாடும் பாடல்களை மெய் மறந்து ரசித்து கேட்...
-
பேரன்பு எனும் உணர்வை குழி தோண்டி புதைத்து விட்டு பேரன்பை தேடி அலைந்து திரிகிறேன்... கேட்க நாதியற்று.. நான் கொஞ்சம் பரவாயில்லை அங்கே பலபேர் ...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக