அந்த நடுத்தர வயது வங்கி வாடிக்கையாளர் ஒருவர் பணம் ஐநூறு ரூபாய் சலானில் எழுதிக் கொண்டு செல்கிறார்.. அங்கே கேஷியர் அவர் கணக்கை பரிசோதித்து விட்டு உங்கள் கணக்கில் ஐநூறு ரூபாய் சற்று முன்பு வரை இருந்தது.. இப்போது உங்கள் கணக்கில் இருந்து சில கட்டணங்களுக்காக வங்கி எடுத்துக் கொண்டது.. இன்னும் இருநூறு ரூபாய் நீங்கள் கட்டி விட்டு போங்கள் என்று சொன்னார்.. வாடிக்கையாளர் அந்த கணக்கை அப்படியே வைத்திருங்கள்..இனி இந்த கணக்கில் நான் பணத்தை போட போவதில்லை..வேறொரு கணக்கை வேறொரு வங்கியில் துவங்க போகிறேன் என்றார்.. அங்கேயும் இதே விதி தான் இருக்கும் என்றார் வங்கி கேஷியர்.. பரவாயில்லை... நான் அங்கே தொடங்கிக் கொள்கிறேன் என்றார் பிடிவாதமாக..அப்பொழுது இந்த கணக்கின் அபராதம் எப்போது செலுத்துவீர்கள் என்று கேட்டார்.. அது வரை பொறுமையாக பதில் அளித்து வந்தவர் இந்த கணக்கின் அபராதம் தானே அடுத்து வரும் எனது ஏழாவது ஜென்மத்தில் செலுத்துவேன் போ ஐயா என்று வேக வேகமாக வங்கியை விட்டு வெளியே வந்து விட்டார்.. அந்த நாட்டு நடப்பின் சாயல் எதுவும் படியாத நடத்தர வயது முதியவர்...#வங்கிஅலப்பறைகளும்#வங்கிவாடிக்கையாளர்களின் #அவஸ்தையும்.#இளையவேணிகிருஷ்ணா.
ஆனந்தமாக வாழுங்கள்
வாழ்க்கை பற்றிய புரிதல்
திங்கள், 21 நவம்பர், 2022
ஒன்றும் அறியாத வங்கி வாடிக்கையாளர் அவஸ்தை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
இத்தனை வன்மமும் எதற்காக??
என் மீதான காதல் உணர்வுகளில் ஒரு வித மையல் கொண்டு என்னை நெருங்காதே... உன் மீதான என் பெரும் காதலின் அலையில் நீ அடித்து சென்று நடுக் க...
-
என் மீதான காதல் உணர்வுகளில் ஒரு வித மையல் கொண்டு என்னை நெருங்காதே... உன் மீதான என் பெரும் காதலின் அலையில் நீ அடித்து சென்று நடுக் க...
-
பல முயற்சி எனும் அற்புதமான பூக்கள் கடும் வெப்பத்தால் கருகி வீழ்வது போல என் முன்னெடுப்பு நிகழ்வுகள் எல்லாம் என்னை துன்புறுத்தி மகிழ்ந...
-
அத்தனையும் துறந்து விடு துறந்து விடு என்கிறார்கள் அங்கே... நானோ வெற்று பாத்திரம் கூட இல்லாமல் சுற்றுகிறேன்... என் ஊண் உடம்பை பற்றிய நினைவ...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக