ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வெள்ளி, 18 நவம்பர், 2022

சுயத்தை தொலைத்து


 காலத்தின் காலடிசுவடை
அடியொற்றி நீந்துகிறேன்
எனக்கான சுயத்தை தொலைத்து
ஏன் சுயம் வேண்டும் என்கின்ற
எனது ஆழ்மன கேள்விக்கு
இங்கே பதில் இல்லை
சுயத்தை தொவைக்க 
விரும்பாத நான்
காலத்தின் நீந்துதலில்
என்னையும் அறியாமல்
தொலைத்து விட்டு
பயணிக்கிறேன்...
நீந்துதல் ஒரு சுகம்
அதுவும் தன்னை மறந்து..
நீந்துதல் ஒரு சுகம்..
இங்கே சுயம் எங்கே என்று
நான் தேட மறந்தேன்
அதுவும் தான் மறந்தது
என்னை..
#இளையவேணிகிருஷ்ணா.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மர்ம வீடு பாகம் (1)

அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...