ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

சனி, 17 செப்டம்பர், 2022

கரை மீது வீசி எறிந்து விடு

 

அலை மீது விழுந்த 

இலை போல

உன் மீது விழுந்த மனமோ

இங்கே ஊசலாடுகிறது..

நீயோ அதை 

கண்டும் காணாமல் கடந்து 

செல்கிறாய்..

கொஞ்சம் இரக்கம் கொண்டு

என் மனதை 

கடலோரத்தில் உள்ள கரைமீது

வீசியேனும் எறிந்து விட்டு

செல் என் இரக்கமற்ற

காதல் கண்மணியே...

#இளையவேணிகிருஷ்ணா.

2 கருத்துகள்:

ஒரு நகரத்தின் பரபரப்புகளுக்கிடையே பறக்கும் பட்டாம்பூச்சியாக...

என் உயிர் சுவாசத்தின்  தீண்டலாக  நீ என்னோடு  ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின்  பரபரப்புக்குகளுக்கிடையே ...