ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வெள்ளி, 23 செப்டம்பர், 2022

சித்தரும் பித்தரும்

 

இந்த பிரபஞ்சத்தில்

சித்தரையும்

எவரும் கண்டுக் கொள்வதில்லை

பித்தரையும்

எவரும் கண்டுக் கொள்வதில்லை..

சித்தரும் பயம் இல்லாதவர்

பித்தரும் பயம் இல்லாதவர்

சித்தருக்கும் துயரம் இல்லை

பித்தருக்கும் துயரம் இல்லை

இங்கே இருவரையும் 

புரிந்துக் கொள்ள

எவரும் துணிவில்லை

இருவரும் இந்த உலகை

கண்டுக் கொள்ளாமல்

பயணிப்பதால் நிம்மதியாக

இருக்கிறார்கள்..

இவர்களின் நிம்மதியை பார்த்து

சம்சாரிகளோ

எரிச்சல் அடைகிறார்கள்..

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒரு நகரத்தின் பரபரப்புகளுக்கிடையே பறக்கும் பட்டாம்பூச்சியாக...

என் உயிர் சுவாசத்தின்  தீண்டலாக  நீ என்னோடு  ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின்  பரபரப்புக்குகளுக்கிடையே ...