ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

புதன், 14 செப்டம்பர், 2022

பிரபஞ்சத்தில் எனது பயணம்...

 


நான் எனது

என்ற மாயையின் பிடியில்

சிக்கி கதறி அழுகிறேன்

அரவணைக்க கரங்கள்

தேடி தேடி அலைந்தும்

பயன் இல்லை...

வலுக்கட்டாயமாக

போவோர் வருவோரின்

கரங்களை பிடித்து

இழுக்கும் போது

உதறி நடக்கும்

மனிதர்களின் மரித்த

உள்ளத்தில்

மனித நேயத்தை

எதிர்பார்ப்பது கானல் நீர்

அழுது புலம்பி பயனில்லை

என்று வைராக்கியம் துணை

கொண்டு

ஒரு சித்தரை போல

ஊர் ஊராக

அலைந்த போது

ஏதோவொரு பேரமைதி

கிடைத்தது...

யாதும் எனது ஊர் தான் 

என்று முணுமுணுப்பதை

பார்த்து

அங்கே ஒருவர்

யாவரும் கேளீர் தானே

என்று என்னிடம்

புன்னகையோடே

கேட்டார்..

கேட்டவருக்கு

பலத்த புன்னகை

மட்டுமே பரிசாக

தந்து விட்டு

அந்த இடத்தை விட்டு

கடக்கிறேன்...

#இளையவேணிகிருஷ்ணா.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒரு நகரத்தின் பரபரப்புகளுக்கிடையே பறக்கும் பட்டாம்பூச்சியாக...

என் உயிர் சுவாசத்தின்  தீண்டலாக  நீ என்னோடு  ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின்  பரபரப்புக்குகளுக்கிடையே ...