ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வெள்ளி, 16 செப்டம்பர், 2022

என் மீது பேரன்பு கொண்ட ரசனை


என்னை சுற்றி நடக்கும்

நிகழ்வுகள்

என்னை கேலி செய்து

சிரிக்கிறது...

நீ இந்த பிரபஞ்சத்தில்

கொஞ்சமும் வாழ

தகுதி இல்லாதவர் என்று..

நான் அதை எதிர்க்காமல்

ஆமோதிக்கிறேன்..

நான் இதுவரை மூச்சு காற்றும்

கொஞ்சம் ரசனையும்

போதும் என்று நினைத்தேன்..

நடப்பதென்னவோ வேறாக

இருக்கும் போது

நான் என்ன செய்ய இயலும்?

கொஞ்சம் கவலையோடு தான்

இருந்தேன்..

ஏன் இந்த கவலை என்று

என் மீது பேரன்பு கொண்ட

ரசனை கட்டிக் கொண்ட போது

நான் இந்த பிரபஞ்சத்தை பார்த்து

பலமாக சிரித்தேன்..

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒரு நகரத்தின் பரபரப்புகளுக்கிடையே பறக்கும் பட்டாம்பூச்சியாக...

என் உயிர் சுவாசத்தின்  தீண்டலாக  நீ என்னோடு  ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின்  பரபரப்புக்குகளுக்கிடையே ...