ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

திங்கள், 19 செப்டம்பர், 2022

ஊடலின் பிடியில்





ஊடலில் எல்லாம்

நம் காதல்

இதயத்தில் அமைதியாக

எரிகிறது....

நீறுபூத்த நெருப்பு போல..

இருவரில் எவரேனும்

ஒருவர் பேசினாலும் போதும்

 அந்த நெருப்பு தணலாக

பற்றிக் கொள்ளும்

நம் இருவரையும்

காதலின்

பெரும் பிணைப்பின் ஊடாக..

எவர் பேசுவது என்பதின்

தயக்கம் ஊடலின் பிடியில்

சிக்கி தவிக்கிறோம்...

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அந்த ஒற்றை மனிதனின் நடமாட்டமும் இல்லாமல்...

  அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில்  என் மனமும் சேர...