ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வெள்ளி, 23 செப்டம்பர், 2022

எனது கடந்த கால நினைவலைகள்

 

இந்த அனுபவம் வேறு மாதிரி எனக்கு..

தணிக்கை படிப்பை நான் மேற்கொள்ளும் போது தணிக்கையாளரிடம் கண்டிப்பாக பயிற்சி சேர்ந்து அதற்கான சான்று வாங்கி சி.ஏ இன்ஸ்டியூட்டில் தந்தால் தான் நாம் மேற்கொண்டு தணிக்கை படிப்பை மேற்கொள்ள முடியும்... அப்படி தணிக்கையாளர் அலுவலகத்தில் பயிற்சி மேற்கொள்ளும் போது மாலையில் நாம் அனைத்து பணிகளையும் முடித்து கிளம்பும் போது வேக வேகமாக ஒரு கிளையண்ட் வருவார் பாருங்கள்.. அப்போது மாலை ஏழு மணியை நெருங்கி கொண்டு இருக்கும்.. சம்பந்தப்பட்ட கிளையண்ட் கணக்கு வழக்குகளை நாம் தான் மேற்கொண்டு இருப்போம்.. அப்போது எமது தணிக்கையாளர் நீதானே அம்மா இவர் பைலை பார்த்து வருகிறாய்.. கொஞ்சம் இருங்கள் என்று சொல்வார் பாருங்கள்.. அப்போது வேறு வழி இல்லாமல் நாம் இருந்து அவர் கேட்கும் விளக்கங்கள் எல்லாம் முடித்து வெளியே வந்து வேகமாக சாலையில் இறங்கி நடக்கும் போது என்னை கடந்து ஒரு பேருந்து போகும்.. அந்த போர்டை பார்த்தால் நான் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லும் பேருந்தாக இருக்கும்.. நான் எப்படியோ சென்று கொண்டு இருக்கும் பேருந்தில் வேகமாக படிக்கட்டில் கால் வைத்து ஏறும் போது என்னை நடத்துநர் ஒரு பார்வை பார்ப்பது எல்லாம் எனக்கு ஒரு மாதிரி தெரியாது..அப்படா ஒரு வழியாக பேருந்து கிடைத்து ஏறி விட்டோம் என்கின்ற நிம்மதி தான் இருக்கும்..

ஏனெனில் சென்னையில் நாம் பேருந்திற்காக காத்திருக்கும் போது நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு போக வேண்டிய பேருந்தை தவிர எல்லா பேருந்தும் நம்மை கடந்து போகும்..அது சென்னைவாசியாக வாழ்ந்தவர்களுக்கு தான் தெரியும்..

விவேக் ஒரு படத்தில் சொல்வது போல அவர் கொஞ்சம் தள்ளி சென்று நிற்பார்.. பேருந்து நிலையம் இதுதானே ஏன் அங்கே அவ்வளவு தூரத்தில் நிற்கிறீர்கள் என்று அந்த படத்தில் மக்கள் கேட்பார்கள்.. அதற்கு அவர் சொல்லும் வசனம் என்றைக்கு சென்னையில் பேருந்து பேருந்து நிலையத்தில் நின்றிருக்கிறது என்று சிரிப்பார்...

இப்படி தான் எனது சென்னை வாழ்க்கை அமைந்தது...

ஏதோ இந்த மீம்ஸ் பார்த்தவுடன் எனக்கு எனது சென்னை அலுவலக நினைவலைகளை பகிர தோன்றியது 😊

#மலரும் #நினைவுகள் 

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அந்த ஒற்றை மனிதனின் நடமாட்டமும் இல்லாமல்...

  அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில்  என் மனமும் சேர...