ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

செவ்வாய், 14 நவம்பர், 2023

கவலைக்கு மருந்திட்டு முடித்த நேரம்...


திடீரென்று மனதின் பாரங்கள் 

கூடும் போது

யாரோ ஒருவரின் பிரச்சினைக்கான 

அழைப்பொன்று காத்திருக்கிறது

எனது அலைபேசியில்...

உடனே எடுத்து பேசிய போது

அவர்கள் கவலைக்கு ஒவ்வொன்றாக 

மருந்திட்டு முடித்த நேரம் ...

எனது பாரங்களின் அழுத்தத்தில் 

இருந்து விடுதலையடைகிறேன்...

எப்படி இது சாத்தியம் என்று

எனக்கு நானே ஆச்சர்யமாக கேள்வி

கேட்டக் கொண்ட போது

பொது நலனில் சுயத்தை 

இழந்தவனுக்கு இங்கே எல்லாமே 

சாத்தியம் என்று

சத்தம் இல்லாமல் சொல்லி 

போனது காலம்

எனது காதருகே...

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

#இசைச்சாரல்வானொலி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாலையோர புழுதியில் நனைந்த ஓவியம்...

 அந்த பிரமாண்டமான வீட்டில்  வாழ்ந்து கொண்டு  இருப்பவர் சில நாட்களில்  உற்சாகம் இழந்து  அவர் தாம் பார்த்து பார்த்து கட்டிய  அந்த வீட்டில்  உள...