ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

ஞாயிறு, 26 நவம்பர், 2023

நானும் இந்த பேரமைதி கொண்ட பௌர்ணமி நிலவும்..


 பேச்சற்ற அந்த நொடிகளை

சில பேர் சுவாரஸ்யமே 

இல்லாமல் 

கடந்து செல்கிறார்கள்...

அப்படி செய்பவர்களை பார்த்து 

நானும் இந்த பேரமைதி கொண்ட 

பௌர்ணமி நிலவும்

கொஞ்சம் வியந்து தான் 

போகிறோம்...

இந்த சூட்சம அமைதியின் துகள்கள் 

ஓராயிரம் தத்துவங்கள் பேசாமல் 

எனக்குள் கடத்தி செல்வதை

அந்த பௌர்ணமி நிலவும்

இந்த இரவும் வேடிக்கை பார்த்து 

தனக்குள் மௌன சிரிப்பொன்றை 

பரிமாறிக் கொள்வதை தவிர 

அவர்களால்

வேறென்ன செய்ய இயலும்?

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

தேதி:26/11/23.

நேரம் #கார்த்திகைபௌர்ணமி

#முன்னிரவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாலையோர புழுதியில் நனைந்த ஓவியம்...

 அந்த பிரமாண்டமான வீட்டில்  வாழ்ந்து கொண்டு  இருப்பவர் சில நாட்களில்  உற்சாகம் இழந்து  அவர் தாம் பார்த்து பார்த்து கட்டிய  அந்த வீட்டில்  உள...