ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

ஞாயிறு, 12 நவம்பர், 2023

அன்றொரு நாள் சரயு நதிக்கரையோரம்...

 


அந்த சரயு நதியின்

அமைதியான நகர்வொன்றின் இரவில்

இதே நாளில் நாம் சந்தித்தோம்...

உனக்கு நினைவு உள்ளதா

தெரியாது...

இன்று நதிக்கரையோரம் உள்ள தீப ஒளியில்

ஒரு கணம்

உன்னை நான்

பார்த்த போது 

எனக்குள் நிகழ்ந்த பேரதிர்வில் உணர்ந்துக் கொண்டேன்...

நீ எனக்கானவன் என்று...

யுகங்கள் தாண்டியும்

மறைக்க முடியாது

அந்த பெரும் காதலை

என்று உணர்ச்சி பிரவாகத்தில் நான்...

நீயோ ஏதும் அறியாதவன் போல ஒரு புன்னகையில்

அந்த ஒளி வெள்ளத்தில் மிதந்து போகிறாய்...

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாலையோர புழுதியில் நனைந்த ஓவியம்...

 அந்த பிரமாண்டமான வீட்டில்  வாழ்ந்து கொண்டு  இருப்பவர் சில நாட்களில்  உற்சாகம் இழந்து  அவர் தாம் பார்த்து பார்த்து கட்டிய  அந்த வீட்டில்  உள...