ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

புதன், 15 நவம்பர், 2023

தனது சிறகால் என் தோளை உரசி...

 


நான் எவரிடமோ சம்பந்தமே

இல்லாமல் சண்டை 

போட்டுக் கொண்டு

இருந்த அந்த தருணத்தில்

தன் சிறகால்

என் தோளை உரசி

அந்த குயில் கூவிக் கொண்டே 

சென்றது...

இது யதேச்சையா அல்லது

அது குறிப்பால் எனக்கு

ஏதோ உணர்த்துகிறதா என்று 

யோசிக்க

ஆரம்பித்த நேரத்தில்

விட்ட இடத்திலிருந்து 

என் எதிராளி சண்டை 

போட்டுக் கொண்டே இருந்தார்...

நானோ அவரை பார்த்து 

இனிமையான குரலால் 

கூவிக் கொண்டே இருந்தேன்

என்னையும் அறியாமல்...

#இரவுகவிதை.

#இசைச்சாரல்வானொலி.

#இளையவேணிகிருஷ்ணா.

நேரம் முன்னிரவு 8:15.

தேதி 15/11/23.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மர்ம வீடு பாகம் (1)

அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...