ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

ஞாயிறு, 26 நவம்பர், 2023

இரவின் பெரும் தாகம்...


இரவின் பெரும் தாகம்

இசை ஒன்றை

மீட்டிக் கொண்டு

இருக்கிறது...

அந்த மெல்லிசையில்

என் ஆன்மா பேரொளியாக

உருகி ஆறாக வழிய

அது இறையெனும்

சமுத்திரத்தை தேடி

அலைகிறது...

நான் வழக்கம் போல வெறுமனே வேடிக்கை

பார்க்கும் மனுஷி ஆகிறேன்...

எந்தவித நிகழ்வின் பாதிப்பும் பெரும் தொல்லையாக ...

நான் கருதுவதால் கூட அப்படி இருக்கலாம்...

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாலையோர புழுதியில் நனைந்த ஓவியம்...

 அந்த பிரமாண்டமான வீட்டில்  வாழ்ந்து கொண்டு  இருப்பவர் சில நாட்களில்  உற்சாகம் இழந்து  அவர் தாம் பார்த்து பார்த்து கட்டிய  அந்த வீட்டில்  உள...