ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

புதன், 26 ஏப்ரல், 2023

சமுதாயத்தின் போக்கு

 

இன்றைய தலையங்கம்:-

சமுதாயத்தில் பல நிகழ்வுகளை நாம் எதிர்கொள்கிறோம்... ஒவ்வொரு நிகழ்வும் ஒவ்வொரு வகை... அதில் திருமணம் ஆன தம்பதிகள் அடிக்கடி எதிர்கொள்ளும் கேள்வி என்ன விஷேசம் ஏதேனும் இருக்கிறதா விசேஷம் ஏதேனும் இருக்கிறதா என்று கேட்டு கேட்டு அவர்களை ஏதோ குற்றம் செய்ததை போல நடத்தாதீர்கள்... மேலும் தற்போதைய காலகட்டத்தில் ஏன் மருத்துவமனை போகவில்லை... ஏன் அதற்கான சிகிச்சை மேற்கொள்ளவில்லை என்று ஆயிரம் ஆயிரம் கேள்விகள்... முதலில் வீதிக்கு வீதி கருத்தரிப்பு மையம் திறந்ததே மனிதர்களை அவமானப்படுத்தும் செயல்.. இதில் இதற்கு விளம்பரம் வேறு... அது ஏதோ இருந்து விட்டு போகட்டும் என்று விட்டு விட முடியவில்லை... தற்போது பல கருத்தரிப்பு மையத்தில் நடக்கும் அவலங்கள் மிகவும் மோசமாக உள்ளது...அதிருக்கட்டும்... குழந்தை இல்லாத தம்பதிகளிடம் தெரிந்தோ தெரியாமலோ குழந்தைகள் எத்தனை என்றோ குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்றோ சமுதாயத்தில் மிகவும் யதார்த்தமாக கேட்கப்படும் கேள்வி..இதை தவறு என்று நான் சொல்ல மாட்டேன்... ஆனால் அந்த பெண்ணோ ஆணோ எங்களுக்கு குழந்தை இல்லை என்று கொஞ்சம் சிரிப்போடு சொல்லும் போது கூட விடாமல் உச் கொட்டி செயற்கையாக முகத்தில் வர வழைத்த சோகத்தோடு ஸாரி என்று சொல்வது தான் கொடுமையின் உச்ச கட்டம்.. அதுதான் அவர்கள் இயல்பாக முகத்தில் இயற்கையான சிரிப்போடு தானே சொல்கிறார்கள்.. பிறகு ஏன் மீண்டும் மீண்டும் அவர்களின் உணர்வோடு விளையாடுகிறீர்கள்..

இங்கே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வாழ்வியல் உள்ளது.. எல்லோரும் ஒரே மாதிரியான வாழ்க்கை தான் வாழ வேண்டும் என்று கட்டாயம் இல்லையே... அது இறைவன் வகுத்த நியதி அல்லது வேறொரு சிறப்பான வாழ்க்கை வாழ இந்த பூமிக்கு வந்தவர்கள் என்று தயவுசெய்து புரிந்துக் கொள்ளுங்கள்...

#இன்றையதலையங்கம்.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இரவு சிந்தனை ✨

  அதீத உள் தேடல்,  உங்களை நீங்களே நேசித்தல்,  எதுவாக இருந்தாலும்  பார்த்துக் கொள்ளலாம்  இங்கே இழப்பதற்கு  நம்மிடம் எதுவும் இல்லை என்கின்ற தி...