ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

சனி, 8 ஏப்ரல், 2023

துன்பம் வரும் போது என்ன செய்ய

 


நமது வாழ்வில் ஆயிரம் ஆயிரம் துன்பங்களை எதிர் கொள்கிறோம் தானே..இன்பங்களை மிகவும் அமைதியாக ஏற்றுக் கொள்ளும் மனம் துன்பத்தை ஏன் அவ்வளவு எளிதாக ஏற்றுக் கொள்வதில்லை என்று யோசித்து பார்த்து இருக்கிறோமா.. அப்படி எல்லாம் ஏன் யோசிக்க போகிறோம் என்கிறீர்களா?😊 எங்களுக்கு துன்பம் மட்டுமே மூட்டை மூட்டையாக வருகிறது..நீங்கள் வேறு காமெடி பண்ணாதீர்கள் பாஸ் என்று நீங்கள் சொல்வது என் செவிகளுக்கு எட்டி விட்டது..😊அதுவும் சரிதான்...

வள்ளுவர் துன்பம் வரும் போது சிரிங்க என்று சொல்வார்.. அதாவது இடுக்கண் வருங்கால் நகுக என்று அவர் சொல்கிறார்.. நான் ஒன்று கேட்கிறேன்.. வடிவேலு பாணியில் கீழேயுள்ள வரிகளை வாசித்து கொள்ளுங்கள் வாசகர்களே! ஏன் ஏன்கிறேன்.. சும்மா அது பாட்டுக்கு ஏதோ போற போக்கில் துன்பத்தை கொடுத்து விட்டு போய் விட்டது..அதை ஏற்றுக் கொள்ள வேண்டியது தானே..அதை விட்டுவிட்டு அதை பார்த்து சிரித்து வைத்தால் அது யூ டர்ன் எடுத்து என்னடா உனக்கு இது பத்தலையா என்று கேட்டு நன்றாக வைத்து செய்வதற்கா...🤾நல்லா சொன்னீங்க ஐடியாவ.. உன் கிட்ட வந்து ஒரு ஐடியா கேட்க வந்தேன் பாரு என்று நாம் வடிவேலு மாதிரியே புலம்பி தள்ளி விடுவோம்..

அதனால் நேயர்களே.. நீங்கள் துன்பத்தை பார்த்து பெரிய வீராவேசமாக சிரித்து எல்லாம் வைத்து விட வேண்டாம்.. அது நமக்கு நாமே வைத்துக் கொள்ளும் ஆப்பு..

அதனால் எந்தவித உணர்வையும் பிரதிபலிக்காமல் அதை பொறுத்துக் கொண்டு பயணியுங்கள்.. இல்லை இது நமக்கு இல்லை என்று வலிக்காத மாதிரி கண்டுக் கொள்ளாமல் பயணியுங்கள்..அதை விடுத்து அதனோடு நீ பெரிய ஆளா நான் பெரிய ஆளா வா ஒரு கை பார்த்து விடலாம் என்று நீங்கள் அதை எதிர் கொண்டால் நிம்மதியின்றி தான் அலைவீர்கள்..சரியா..ஏதோ எனக்கு சொல்ல தோன்றியது.. பிறகு இதை கடைப்பிடிப்பதும் கடைப்பிடிக்காமல் போவதும் உங்கள் விருப்பம் நேயர்களே 🤾🏃🏃🏃

#இளையவேணிகிருஷ்ணா.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இரவு சிந்தனை ✨

  அதீத உள் தேடல்,  உங்களை நீங்களே நேசித்தல்,  எதுவாக இருந்தாலும்  பார்த்துக் கொள்ளலாம்  இங்கே இழப்பதற்கு  நம்மிடம் எதுவும் இல்லை என்கின்ற தி...