ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

சனி, 1 ஏப்ரல், 2023

அந்த நதியும் நானும் அந்த பறவையும்..

 

ஏதோ நடந்து விட்டு போகட்டும்..

எதையும்

கண்டுக் கொள்ளும் மனநிலையில் நான் தற்போது இல்லை...

குறிப்பாக சொல்ல போனால் அதற்கும் எனக்கும் எந்த ஜென்மத்திலும் சம்பந்தமே இல்லாத போது நான் ஏன் அதை பற்றி அவ்வளவாக யோசிக்க வேண்டும்?

இங்கே ஒரு நதியில் நிச்சலனமாக பயணிக்கிறேன்...

அதற்கு ஏதேனும் வலி உள்ளதா என்று கேட்க கூட தோன்றவில்லை எனக்கு..

அதுவும் அதைப் பற்றி எதுவும் என்னிடம் சொல்ல தோன்றாமல் சுகமாக சுமக்கிறது...

இந்த பிரபஞ்சத்தின் தனித்துவத்தை நாங்கள் சூட்சமமாக விவாதிக்கிறோம்..

அங்கே ஒரு பறவை எங்களை பார்த்து கேட்கிறது...

கொஞ்சம் என்னையும் சேர்த்துக் கொண்டு பயணியுங்கள் என்று கொஞ்சம் தயக்கமாக கேட்கிறது.. அதன் சிறகுகள் எங்களை பார்த்து சிநேகமாக படபடப்பதை எங்களால் உணர முடிகிறது...

நான் சொல்கிறேன் அதனிடம்... இந்த நதி எனக்கு மட்டுமே சொந்தம் இல்லை பறவையே... உன்னை சுமப்பதால் அது மூழ்கப் போவதும் இல்லை... இங்கே இதன் தனித்துவமே அதன் பெருந்தன்மை தான்..

உன்னை எப்படி அது நிராகரிக்கும்..வா என்னருகில் அமர்ந்துக் கொள் என்று அழைக்கிறேன்..

நதியும் சிநேகமாக கை குலுக்கி அனுமதித்தது...

இங்கே நாங்கள் மூவரும் பயணிக்கிறோம்... வாழ்வின் சூட்சுமத்தை இங்கே உங்களால் உணர முடிந்தால் நீங்களும் இங்கே வரலாம்... இங்கே நதி எவரையும் நிராகரிப்பது இல்லை... அதன் பெருந்தன்மை உங்களுக்கு அவ்வளவு எளிதாக புரிந்து கொள்ள முடிந்தால் நீங்களும் ஆனந்தமாக பயணிக்கலாம் அதில் எந்த வித சஞ்சலங்களும் இல்லாமல்...

#நதியும்நானும்அந்தபறவையும்.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இரவு சிந்தனை ✨

  அதீத உள் தேடல்,  உங்களை நீங்களே நேசித்தல்,  எதுவாக இருந்தாலும்  பார்த்துக் கொள்ளலாம்  இங்கே இழப்பதற்கு  நம்மிடம் எதுவும் இல்லை என்கின்ற தி...