ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

புதன், 25 அக்டோபர், 2023

மகரம் எனும் பெரும் சக்தி...

 


மகர ராசி என்பது எல்லா கர்மாக்களையும் முடித்து விட்டு இறைவனோடு இரண்டற கலந்து இறை எனும் சூட்சமத்தில் ஒடுங்கி விடும் ராசி...

கர்ம பந்தங்களை பொசுக்கி சாம்பலாக்கி ஒரு பற்றற்ற தன்மையில் யாரையும் ஒரு பொருட்டாக மதிக்காமல் இறைவனின் சூட்சம சக்தியின் துணைக் கொண்டு இந்த பிரபஞ்சத்தின் ஒட்டு மொத்த தொடர்பையும் கிழித்துக் கொண்டு அந்த ஆன்மா எத்தனை குதிரை திறனில் பயணிக்கும் என்று அந்த படைத்த பிரம்மாவுக்கு கூட தெரியாது... அது தான் மகரம்...

எவரேனும் தனது வழி பயணத்தில் குறுக்கிட்டால் அமைதியாக சொல்லி புரிய வைப்பார்கள்.. இல்லை என்றால் தூக்கி போட்டு விட்டு என் வழி தனி வழி என்று பயணிப்பார்கள்...மகரத்தை புரிந்துக் கொண்டு அவர்களோடு பயணிப்பது அவ்வளவு எளிதல்ல... ஆனால் அந்த இறைவன் எப்போதும் துணையாக பயணிக்கும் ஒரே ராசி மகரம்.. அது ஒரு விஷேஷமான ராசி... துன்பங்களை எல்லாம் பெரிதாக மதிக்க மாட்டார்கள்..அதே சமயத்தில் இன்பத்தையும் தூக்கி போட்டு விட்டு எளிதாக பயணிப்பவர்கள்... எப்போதும் ஒரு பெரிய ராஜ்ஜியத்தை ஆளும் பெரும் சக்தி அவர்களுக்கு உண்டு... நிறைய விட்டு கொடுப்பார்கள்.. ஒரு கட்டத்தில் சரிப்பட்டு வராது என்று தெரிந்து விட்டால் தூக்கி போட்டு விட்டு போய்க் கொண்டே இருப்பார்கள்.. அதிலும் அனைத்து கிரகங்களும் வலுத்து அது மகர ராசியாக இருந்து விட்டால் தயைக் கூர்ந்து அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள்.. அது உங்களுக்கு நல்லது.. இல்லை என்றால் உங்களுக்கு தான் நஷ்டம்.. மேலும் பல கிரகங்கள் வலுத்து விட்டால் அந்த இறைவனோடு நேருக்கு நேர் சண்டை போடும் பெரும் சக்தி உள்ளவர்கள் மகர ராசிக்காரர்கள்...

#மகரம்...

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அந்த ஒற்றை மனிதனின் நடமாட்டமும் இல்லாமல்...

  அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில்  என் மனமும் சேர...