ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

செவ்வாய், 28 நவம்பர், 2023

இது முதன் முறையல்ல எனக்கு...

 


எழுதுவதை தவிர

வேறென்ன தெரியும் என்று 

கேட்கிறார்கள்...

சிந்தாமல் சிதறாமல்

இந்த நொடியை ரசித்து புன்னகைக்க 

தெரியும் என்றேன்...

கேட்டவர்கள் கொஞ்சம்

எனக்கு மனம் பேதலித்து விட்டது போல என்று

சைகையால் சொல்லி செல்கிறார்கள்...

அந்த சைகை மொழியில்

ஆயிரம் ஆயிரம் ரசனைகளை நான் 

கண்டு களித்து கொஞ்சம் மெதுவாக 

நகர்கிறேன்

என் இதழில் புன்னகை 

சிந்தியபடியே...

இங்கே ரசனை என்பது

மனம் பேதலித்து விட்ட மனிதராக 

அடையாளம்

கண்டுக் கொள்ளப்படுவது

எனக்கு இது முதன் முறையல்ல...

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

தேதி 28/11/23.

நேரம் அந்தி மாலையும் இரவும் 

சந்திக்கும் 7:00.மணி..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

போர் நிறுத்தம்...

   இத்தனை நாள் தூரமாக நின்று  வேடிக்கை பார்த்த  அமைதி  இன்று எந்த தயக்கமும்  இல்லாமல் என் கைகளில்  வேகமாக ஓடி வந்து  பேரன்பு கொண்டு  என்னை ...