ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

செவ்வாய், 28 நவம்பர், 2023

இது முதன் முறையல்ல எனக்கு...

 


எழுதுவதை தவிர

வேறென்ன தெரியும் என்று 

கேட்கிறார்கள்...

சிந்தாமல் சிதறாமல்

இந்த நொடியை ரசித்து புன்னகைக்க 

தெரியும் என்றேன்...

கேட்டவர்கள் கொஞ்சம்

எனக்கு மனம் பேதலித்து விட்டது போல என்று

சைகையால் சொல்லி செல்கிறார்கள்...

அந்த சைகை மொழியில்

ஆயிரம் ஆயிரம் ரசனைகளை நான் 

கண்டு களித்து கொஞ்சம் மெதுவாக 

நகர்கிறேன்

என் இதழில் புன்னகை 

சிந்தியபடியே...

இங்கே ரசனை என்பது

மனம் பேதலித்து விட்ட மனிதராக 

அடையாளம்

கண்டுக் கொள்ளப்படுவது

எனக்கு இது முதன் முறையல்ல...

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

தேதி 28/11/23.

நேரம் அந்தி மாலையும் இரவும் 

சந்திக்கும் 7:00.மணி..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒரு நகரத்தின் பரபரப்புகளுக்கிடையே பறக்கும் பட்டாம்பூச்சியாக...

என் உயிர் சுவாசத்தின்  தீண்டலாக  நீ என்னோடு  ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின்  பரபரப்புக்குகளுக்கிடையே ...