ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

ஞாயிறு, 7 ஏப்ரல், 2024

இந்த நொடிக்கும் போதை ஏற்றுகிறேன்...


நான் தான் இன்று

மிகவும் கோலாகலமாக

இந்த அந்தி மாலைப் பொழுதை

கொண்டாடி தீர்க்கிறேன்...

என் அதீத உற்சாகத்தை கண்டு

நிச்சயமாக ஏதோவொரு விரும்பிய

நிகழ்வு தான் எனது இந்த

கொண்டாட்டத்திற்கு 

காரணமாக இருக்கும் என்று 

என் காதுப்பட உரக்க பேசி

என்னை பார்த்து கையசைத்து

என்னருகே வந்து

வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டே

கேட்கிறார்கள் ...

உங்கள் விருப்ப நிகழ்வு தான் 

நிறைவேறி உள்ளதா...

அப்படி என்றால் அது என்ன என்று

மிகவும் ஆர்வமாக கேட்கிறார்கள்...

நானோ பலமாக சிரித்துக் கொண்டே

எனக்கென்று விருப்ப நிகழ்வுகள்

இது வரை நடந்து விடவில்லை...

இனியும் வேண்டாம் என்றே

உற்சாகமாக கொண்டாடி தீர்க்கிறேன்

ஆமாம் இங்கே கொண்டாடுவதற்கு

விருப்ப நிகழ்வு ஒன்று

அவசியமா என்ன என்று 

கேட்டுக் கொண்டே 

அந்த பழச்சாறை பருகி 

இந்த நொடிக்கும்

போதை ஏற்றுகிறேன்...

என்னை

சூழ்ந்துக் கொண்டவர்களுக்கு 

ஆச்சரியம் தாங்காமல்

என் கொண்டாட்டத்தின்

நிறைவு வரை என்னோடு இருந்து

இந்த பொழுதிற்கு ஒரு ஆச்சரியத்தை

கொடுத்து விடை பெறுகிறார்கள்...

நானும் தான் விடை பெறுகிறேன்

இந்த அந்தி மாலைப் பொழுதின்

கொண்டாட்டத்தின் தீராத காதலின்

அணைப்போடு....

#இளையவேணிகிருஷ்ணா.

#அந்திமாலைப் பொழுதின் 

கொண்டாட்டம்...

நாள் 07//04/24.

ஞாயிற்றுக்கிழமை.

நேரம் முன்னிரவு 8:20.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இன்றைய தலையங்கம்

  இன்றைய தலையங்கம்:- யாரோ பிரிகிறார்கள் சேர்கிறார்கள்... ஏன் அவர்கள் தனிப்பட்ட வாழ்வில் பொது ஜனங்கள் தலையிட்டு ஏதேதோ கருத்து சொல்லி அவர்களை ...