ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

ஞாயிறு, 28 ஏப்ரல், 2024

இரவு கவிதை 🍁


என் வலி எனும் உணர்வுகளை நிச்சலனமாக 

உள் வாங்கி வெளியே தள்ளி

கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்கிறேன்....

இந்த வெட்ட வெளி என்னை 

தழுவிக் கொண்டு

ஆறுதல் சொல்கிறது...

நான் என் உணர்வுகளை கடத்தி வைக்க எந்த ஜீவனையும் தேடவில்லை...

அதை மிக கச்சிதமாக

எந்தவித சிரமமும் இல்லாமல் இந்த இயற்கை செய்து முடித்து விடுகிறது...

ஒருவரின் தேடலும் இல்லாமல் இங்கே நான் வாழ கற்றுக் கொண்டேன்

மிகவும் இயல்பாக என்று

அந்த காலம் என்னை உதாரண புருஷராக்கி அங்கே பலபேருக்கு கை காட்டி விளக்கம் சொல்லி 

செல்லும் போது

நான் நானாக பயணிப்பதை இங்கே வேடிக்கை பார்க்க

இவ்வளவு கூட்டமா என்று

கொஞ்சம் மலைத்து போகிறேன்...

ஒரு தேடலும் 

ஒரு இலட்சியமும் இல்லாமல்

இங்கே பயணிப்பது எனக்கு அவ்வளவு எளிதாக இருப்பது

வரம் என்று நினைத்துக் கொண்டு இருக்கும் போது

அங்கே ஒரு மனம் நலன் சரியில்லாத ஒருவர் தேமே என்று வானத்தை பார்த்துக் கொண்டு சாலையின் நடுவில் நிற்கிறார் என்று

யாரோ ஒருவர் கூப்பாடு போட

என்னை நோக்கி மறுபடியும் ஒரு கூட்டம் கூடி விட்டது...

இங்கே வாழ்தல் ஒரு பிழையா பிழைப்பிற்கான சாடலா என்று முணுமுணுத்துக் கொண்டே

அவர்களை ஒரு பார்வையால் 

தீண்டி விட்டு நகர்கிறேன்...

அந்த முணுமுணுப்பிற்கும்

இங்கே அந்த கூட்டம் சாபம் 

கொடுத்து செல்கிறது...

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

நேரம் முன்னிரவு 10:52.

நாள் 28/04/24.

ஞாயிற்றுக்கிழமை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இன்றைய தலையங்கம்

  இன்றைய தலையங்கம்:- யாரோ பிரிகிறார்கள் சேர்கிறார்கள்... ஏன் அவர்கள் தனிப்பட்ட வாழ்வில் பொது ஜனங்கள் தலையிட்டு ஏதேதோ கருத்து சொல்லி அவர்களை ...