ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வெள்ளி, 26 ஏப்ரல், 2024

அந்த ஈசலின் பெரும் காதல் .🍁🍁🍁


அந்த ஈசலின் பெரும் காதலை மறுக்க மனமில்லாமல்

சேற்றில் விழுகிறது

அந்த மழைத் துளி...

ஈசலும் அந்த இரவை கடந்து ஜீவித்து இருக்கவில்லை...

அந்த தூய்மையான மழைத் துளியும் ஜீவித்து இருக்கவில்லை...

இங்கே பெரும் காதலோடு ஒரு சில மணித்துளிகள் பயணித்து இறந்து விட்ட 

இந்த இருவரின் ஈடு இணை இல்லாத காதல்

இரவென்றும் பாராமல் ஏதேதோ

முணுமுணுத்துக் கொண்டே சாலையில் பயணிக்கும்

அந்த நகரத்தாரை கூவி அருகே அழைத்து ஒரு சில விநாடிகள் துக்கம் அனுசரிக்க சொல்கிறேன்...

அந்த துக்கம் அனுசரிக்க நாங்கள் செய்யும் விநாடிகளின் விரயத்தை எங்களுக்கு தாங்கவொணாத துயரத்தை கொடுத்து விடும் என்று குரல் கம்ம சொல்லி செல்கிறார்கள்...

இங்கே வாழ்தல் இனிதா

இறத்தல் இனிதா

பெரும் காதல் இனிதா...

நீங்களே சொல்லுங்கள்

பிரபஞ்சத்தின் நாயகர்களே!

#பிரபஞ்சத்தின்நாயகர்கள்.

#இரவுகவிதை.

முன்னிரவு நேரம் 11:25.

நாள்:26/04/24.

வெள்ளிக்கிழமை.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒரு நகரத்தின் பரபரப்புகளுக்கிடையே பறக்கும் பட்டாம்பூச்சியாக...

என் உயிர் சுவாசத்தின்  தீண்டலாக  நீ என்னோடு  ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின்  பரபரப்புக்குகளுக்கிடையே ...