ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

ஞாயிறு, 7 ஏப்ரல், 2024

அந்த அலைந்து திரிந்துக் கொண்டிருக்கும் நகரம்...


அந்த அலைந்து

திரிந்துக் கொண்டிருக்கும் 

நகரத்தின் காற்று

என் மனதை தீண்டாத உயரத்தில்

நான் நின்று வேடிக்கை பார்க்கிறேன்!

அங்கே அலைந்து

திரிந்துக் கொண்டிருக்கும் 

மனிதர்களிடம் 

ஏதோவொரு அனுபவத்தை

அந்த நகரத்தின் சாலை

பெற்றுக் கொண்ட திருப்தி...

அங்கே பயணிக்கும் மக்களோ

கொஞ்சமும் நிதானம் இல்லாமல்

தங்களது நகர்வுகள் மூலம்

சாலைக்கு தீனிப் போட்டு விட்டு 

சுவாரஸ்யம் கொஞ்சமும் இல்லாமல்

அந்தி சாயும் வேளையில்

இல்லத்திற்குள் நுழையும் போது

வெற்று ஆராவாரங்களின்

மூச்சு காற்று கொஞ்சம் கொஞ்சமாக

அவர்களிடம் இருந்து

விடை பெறுவதை கூட 

உணர முடியாமல் மீண்டும் 

ஓடுகிறார்கள் இல்லத்திற்குள்

ஏதோவொரு குற்றவுணர்ச்சி 

அவர்களை தீண்டுவதை போல 

உணர்ந்ததால்...

இங்கே எது தான் தேவை 

அவர்களுக்கு என்று..

அந்த இல்லம் அவர்களை வெறுமனே

வேடிக்கை பார்த்து 

கவலைக் கொள்கிறது...

#நகரத்தின் சாயல்..

#வாழ்வியல் கவிதை...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 07/04/24.

ஞாயிற்றுக்கிழமை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இன்றைய தலையங்கம்

  இன்றைய தலையங்கம்:- யாரோ பிரிகிறார்கள் சேர்கிறார்கள்... ஏன் அவர்கள் தனிப்பட்ட வாழ்வில் பொது ஜனங்கள் தலையிட்டு ஏதேதோ கருத்து சொல்லி அவர்களை ...