ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

ஞாயிறு, 7 ஏப்ரல், 2024

ஓடி ஓடி நாட்களும் சத்தம் இல்லாமல் விடை பெறும் தருணத்தில்...

 

இது சுவாரஸ்யம்...

இது சுவாரஸ்யம் என்று

ஓடி ஓடி நாட்களும் சத்தம் இல்லாமல்

என்னிடம் இருந்து

விடை பெறும் காலத்தில் 

அந்த கடைசி காலத்தின்

சில துளிகள்...

எந்தவித சுவாரஸ்யமும் 

இல்லை உன்னிடம் என்று 

ஒதுக்கி வைத்திருந்த தனிமை

என் கைகளை ஆறுதலாக

அதே சமயத்தில் எங்கே மீண்டும்

உதாசீனம் செய்து விடுவேனோ 

என்று நடுக்கத்தோடே 

என் கரங்களை தீண்டும் போது 

என் கண்களில் வழிந்த 

கண்ணீர் துளிகள் அதன் மீது 

சிதறியதில் என் உணர்வை 

மௌனமாக புரிந்துக் கொண்டு

வாரி அணைத்துக் கொண்டதை

இங்கே எனை கடந்து சென்ற 

அத்தனை சுவாரஸ்யமான 

நிகழ்வுகளும் 

வேடிக்கை பார்த்து கேலி சிரிப்பை 

உதிர்த்து சென்றதை

நாங்கள் இருவரும்

கண்டுக் கொள்ளவில்லை...

#இளையவேணிகிருஷ்ணா.

#வாழ்வியல் கவிதை...

நாள் 07/04/24.

ஞாயிற்றுக்கிழமை.

நேரம் முன்னிரவு 8:00மணி..


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இன்றைய தலையங்கம்

  இன்றைய தலையங்கம்:- யாரோ பிரிகிறார்கள் சேர்கிறார்கள்... ஏன் அவர்கள் தனிப்பட்ட வாழ்வில் பொது ஜனங்கள் தலையிட்டு ஏதேதோ கருத்து சொல்லி அவர்களை ...