ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

சனி, 6 ஏப்ரல், 2024

இரவு கவிதை 🍁


அந்த சூழலில் 

நான் எப்படி நடந்துக் கொள்ள 

வேண்டும் என்று...

இந்த உலகம் 

ஆயிரம் ஆயிரம் யோசனைகளை

சொல்லி சொல்லி 

அனுப்பி வைத்தது...

அந்த சூழலை எதிர் கொண்டு

திரும்பிய என்னை 

இந்த உலகம் கேட்டது

என்ன நாங்கள் சொன்னபடி

எல்லாம் சரியாக தானே முடிந்தது 

என்றது!

ஆம்...அந்த சூழல் 

எந்த காயமும் அடையாமல்

எல்லாம் நன்றாக முடிந்தது என்றேன் 

நான்...

அவர்களும் புரியாமல் தலையாட்டி விட்டு

ஒரு வித நிம்மதியோடு விடை 

பெறுகிறார்கள்...

#இரவு கவிதை 🍁.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:06/04/24.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இன்றைய தலையங்கம்

  இன்றைய தலையங்கம்:- யாரோ பிரிகிறார்கள் சேர்கிறார்கள்... ஏன் அவர்கள் தனிப்பட்ட வாழ்வில் பொது ஜனங்கள் தலையிட்டு ஏதேதோ கருத்து சொல்லி அவர்களை ...