ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வெள்ளி, 26 ஏப்ரல், 2024

வீழ்ந்துக் கொண்டே இருக்கும் அந்த உயிர் துளிகள்...


கொஞ்சம் கொஞ்சமாக கொன்று தின்று விடும் காலத்தின் முன் மண்டியிட மனமில்லாமல் கதறி அலைகிறேன் இங்கும் அங்கும்...

என் வாழ்வின் துளிகள் கரைகிறது சத்தம் இல்லாமல்...

நானோ இன்னும் ஏதோ ஒன்று என்னுள் உயிர் கொண்டு அலைவதை மட்டும் கையில் பிடித்து விட எண்ணம் கொண்டு பகீரத முயற்சி கொண்டு அகத்தில் ஆழமாக விழுகிறேன்...

விடுபட்டு விட மட்டும் எண்ணம் கொண்ட அந்த உயிர் துளி மட்டும் கையில் அகப்படாமல் உள்ளே உள்ளே வீழ்ந்துக் கொண்டே இருக்கிறது...

என் கையில் அகப்படாமல்

வீழ்ந்துக் கொண்டே இருக்கும் அந்த உயிர் துளிக்கும் ஏதோவொரு இலட்சியம் இருக்கும் போது நான் ஏன் அதை துரத்தி அலைய வேண்டும் என்று

விட்டு விட்டு மேலே மேலே

நான் மிதந்து வருவதை

அந்த காலம் மட்டும்

கண்டும் காணாமல் பயணிப்பது 

எனக்கு நியாயமாக தெரியவில்லை...

உங்களுக்கும் அப்படி தானே?

#இரவுகவிதை.

நேரம் முன்னிரவு 10:45.

நாள் 26/04/24.

வெள்ளிக்கிழமை.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இன்றைய தலையங்கம்

  இன்றைய தலையங்கம்:- யாரோ பிரிகிறார்கள் சேர்கிறார்கள்... ஏன் அவர்கள் தனிப்பட்ட வாழ்வில் பொது ஜனங்கள் தலையிட்டு ஏதேதோ கருத்து சொல்லி அவர்களை ...