ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

சனி, 30 செப்டம்பர், 2023

பயணத்தில் ஒரு சந்திப்பு (16)

 


✨இங்கே ஏதோவொரு நாளை ஏதாவது காரணம் ஏற்படுத்திக் கொண்டு கொண்டாடுகிறார்கள்.. கொண்டாட்டங்கள் தேவை தான் எப்போதும்.. ஆனால் அதை ஏன் குறிப்பிட்ட நாளில் மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும் என்று எனக்குள் ஆழ்ந்த சிந்தனை மற்றும் கேள்வி..


வாழ்வின் ஒவ்வொரு நொடியும் அமிர்தத்தை தாங்கியே பயணிக்கிறது..நாமோ அதை முழுமையாக பருகாமல் ஏனோதானோ என்று சிந்தி சிதறி வீணடித்து விடுகிறோம்..


ஏதோவொரு நாளில் அனைத்து மகிழ்வான தருணங்களையும் முழுவதும் வடித்து விட்டு மீதி நாட்களை வறண்ட பாலையாக பரிசளித்துக் கொள்கிறோம் நமக்கு நாமே..அப்படி தானே!


தொடர் நிகழ்வுகளில் உணர்வற்ற பயணத்தில் நம்மை இணைத்து கொண்டு அதை நாம் பெரிதாக வாழ்ந்ததாக காட்டிக் கொள்கிறோம்..


ஏதோ பெரிதாக சம்பாதித்து உணர்வற்ற பொருட்களை வீடு நிறைய நிறைத்து விட்டு இங்கே பார்..என்னை போல வாழ்ந்தவர்கள் இந்த உலகில் இல்லை என்று பெருமைப்பட்டு கொள்கிறோம்..உண்மைதானே.

ஏதோ சில நேரங்களில் சில மணித்துளிகளில் மட்டும் முழுமையாக நாம் வாழ்ந்தததற்கான அடையாளத்தை விட்டு விட்டு நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம்..


வாழ்க்கை என்பது ஏதோவொரு உணர்வற்ற பயணம் அல்ல..அது நமக்கு பல ஆனந்தத்தை பரிசளித்து இருக்கிறது.. ஆனால் நாம் அதனிடம் சலிப்பையே வெளிப்படுத்தி கொண்டு இருக்கிறோம்..


எல்லா சலிப்புகளும் நம்மை ஒன்றாக சேர்ந்து அழுத்தும் போது இறைவனிடம் கெஞ்சுகிறோம்.. ஏன் எனக்கு மட்டும் வாழ்வை சலிப்பாக வைத்தாய் என..அவரோ நம் மேல் கோபம் கொள்ளாமல் மிகவும் நிதானமாக உனக்கு நான் எங்கே சலிப்பை பரிசளித்தேன்..அமிர்தத்தை தானே பரிசளித்தேன் என்கிறார் புன்முறுவலோடு..

நாம் கொண்டாட்டத்தை சிறு பாத்திரத்தில் அடைத்து விட்டு பெரிய அளவில் ஆனந்தத்தை தேடுகிறோம்..இது எப்படி சாத்தியமாகும்..

இந்த பிரபஞ்சம் மிகவும் பெரியது.. நாம் அதில் சிறுதுளியை மட்டும் பருகி விட்டு வாழ்க்கை சலிப்பானது என்று ஓர் முடிவுக்கு வந்து விடுகிறோம்.. இல்லையா..

நாம் கொண்டாட்டத்தை அந்த சிறு பாத்திரத்தில் இருந்து விடுவித்து விடுவோம்.. ஏனெனில் வாழ்க்கையின் கொண்டாட்டத்திற்கு நாம் வைத்திருக்கும் சிறு பாத்திரம் எப்போதும் போதாது..

ஓர் பறவையை போல இந்த பிரபஞ்சத்தின் மொத்த பகுதியிலும் சுற்றி திரிவோம்..

ஒவ்வொரு மணித் துளியும் சுமந்து வரும் அமிர்தத்தை பருகி கொண்டாடி திரிவோம்..

இந்த வாழ்க்கை எல்லா நேரங்களிலும் கொண்டாட்டத்திற்கானது..

மீண்டும் சந்திப்போம் நேயர்களே

..🧚💃🐒🦋🦚🚵💫🥳

#பயணத்தில் ஒரு சந்திப்பு (16).

#இளையவேணிகிருஷ்ணா.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அந்த ஒற்றை மனிதனின் நடமாட்டமும் இல்லாமல்...

  அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில்  என் மனமும் சேர...