ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

ஞாயிறு, 4 டிசம்பர், 2022

இந்த மழை இரவும் நானும்


 இந்த மழைக் கால

இரவொன்றில்

அங்கே தெருவில்

குரைத்து கொண்டு

இருக்கும் 

அந்த நாயின்...

அதன் தவிப்பை...

இங்கே இருக்கும்

இதமான காலநிலையில்

கதவடைத்து 

உறங்குபவர்களுக்கு 

தெரிய நியாயமில்லை தான்..

நீ விழித்துக் கொண்டு தானே 

இருக்கிறாய்

அதன் குரலின் தவிப்பு

உணர்ந்தும் ஏன்

வெளியே செல்லவில்லை என்று

என் மனசாட்சி கேட்கும் 

கேள்விகளுக்கு பதில் 

என்னிடம் இல்லை..

என் தவிப்பை மௌனமாக

அதற்கு ஒரு மின்சாரம் இல்லாத  

இந்த அறையில்

அமர்ந்துக் கொண்டு

கடத்திக் கொண்டு இருக்கிறேன்...

மனதின்

குற்றவுணர்ச்சி எனும்

நெருடலோடு...

#இந்த மழை இரவும் நானும்

#இளையவேணிகிருஷ்ணா.

3 கருத்துகள்:

கழுதையும் நானும்...

 #கழுதையும் #நானும்:- *************************** அங்கே எனதருகில் ஓர் கழுதை வெகுநேரமாக என்னையே பார்த்துக் கொண்டு இருந்தது.. நான் அது ஏதோ பார...