ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

செவ்வாய், 6 டிசம்பர், 2022

அந்த அலைபேசியின் கதறல்

 

நீதான் அழைக்கிறாய்

என்று தெரிந்தும்

அழைப்பை ஏற்க மறுக்கிறது

என் மனம்...

மீண்டும் மீண்டும்

காதலின் கதறலை

கேட்க என் மனதிற்கு

தைரியம் இல்லை...

நாம் மௌனமாக

விலகி காதலை கண்ணீரில்

கரைத்து பயணிப்போம்

இதுவும் ஒரு துளி

இன்பம் தானே

இங்கே...

எளிதாக சொல்லிக் கொள்கிறேன்...

மனம் தான் ஏற்க மறுத்து

பெரும் கண்ணீரை

பரிசாக அளித்து விடுகிறது..

அதை நம் காதலின் அடையாளமாக

அதன் எல்லா துளிகளையும்

ஒரு தாளில் சேர்த்து 

வைத்துக் கொள்கிறேன்..

#இளையவேணிகிருஷ்ணா.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒரு நகரத்தின் பரபரப்புகளுக்கிடையே பறக்கும் பட்டாம்பூச்சியாக...

என் உயிர் சுவாசத்தின்  தீண்டலாக  நீ என்னோடு  ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின்  பரபரப்புக்குகளுக்கிடையே ...