ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 29 டிசம்பர், 2022

துயரத்தை பருகுகிறேன்

 

வாழ்வின் துயரங்களை

நேசிக்கும் போது

வாழ்வின் அர்த்தம்

மனமெனும் ஆற்றில்

நெகிழ்ந்து ஓடுகிறது..

அந்த ஆற்றின் சத்தத்தில்

கரைய

துடிக்கிறது துயரம்..

நானோ அதை கரைய விடாமல்

தடுத்து எனக்குள்

 நிரப்பிக் கொள்கிறேன்..

ஏன் அது கரைந்து விடுவதை

தடுக்கிறீர்கள்..

நீங்கள் துயரத்தில் இருந்து

விடுபடுவீர்கள் தானே என்கிறார்கள்..

விடுபடுவது என்பதே இங்கே

அதை முழுமையாக

அனுபவித்தலில் தான் உள்ளது என்றேன்..

ஏதோ உளறுகிறேன் என்று

முணுமுணுத்து கலைகிறார்கள்..

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒரு நகரத்தின் பரபரப்புகளுக்கிடையே பறக்கும் பட்டாம்பூச்சியாக...

என் உயிர் சுவாசத்தின்  தீண்டலாக  நீ என்னோடு  ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின்  பரபரப்புக்குகளுக்கிடையே ...