ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

சனி, 24 டிசம்பர், 2022

சுமைதாங்கியின் கண்ணீர்

 

அந்த சுமைதாங்கிகளுக்கும் வேண்டும் 

கொஞ்சம் ஆசுவாசம்..

இதை உணராமல்

போவோர் வருவோர்

அதன் மீது சுமையை இறக்கி

ஆசுவாசப்படுத்திக் கொண்டு

தனது பயணத்தை

கவலை இல்லாமல் தொடர்கிறார்கள்..

சுமைதாங்கியோ மௌனமாக

கண்ணீர் வடிக்கிறது...

கொஞ்சம் சத்தமும் கேட்டால்

ஆறுதல் தேடுபவர்கள்

ஆதங்கப்பட்டு விடுவார்களே என்று...

#இளையவேணிகிருஷ்ணா.

2 கருத்துகள்:

ஒரு நகரத்தின் பரபரப்புகளுக்கிடையே பறக்கும் பட்டாம்பூச்சியாக...

என் உயிர் சுவாசத்தின்  தீண்டலாக  நீ என்னோடு  ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின்  பரபரப்புக்குகளுக்கிடையே ...