ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 22 பிப்ரவரி, 2024

இரவு கவிதை 🍁

 


எவ்வளவோ வாழ்வில்

பயணித்து களைத்து விட்டேன் 

என்றேன்...

இதோ அங்கே இளைப்பாற

ஓரிரு மரங்கள் இருக்கிறது

என்று காலம் என்னை பார்த்து

புன்னகைத்து கடக்கிறது...

ஆறுதலை தேடி காலம்

அலைவதே இல்லை...

நாமோ எவரோயொருவர்

ஆறுதலுக்காக யுகம் யுகமாக

காத்திருந்து கருவறை புகுகிறோம்

மீண்டும் மீண்டும்...

#இரவு சிந்தனை ✨

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 22/02/24.

வியாழக்கிழமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒரு நகரத்தின் பரபரப்புகளுக்கிடையே பறக்கும் பட்டாம்பூச்சியாக...

என் உயிர் சுவாசத்தின்  தீண்டலாக  நீ என்னோடு  ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின்  பரபரப்புக்குகளுக்கிடையே ...