ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

ஞாயிறு, 18 பிப்ரவரி, 2024

அமைதி இழந்த நிம்மதி..

 


நிம்மதிகள் அமைதி இன்றி

அலைவதை எப்போதேனும்

நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா?

நான் பார்த்துக் கொண்டு தான்

இருக்கிறேன்...

ஒவ்வொரு நொடியும்

இங்கே எது எதற்காகவோ

ஓடிக் கொண்டே

நிம்மதியை தேடி அலையும்

மனிதர்களை பார்த்து...

அந்த நிம்மதி தனது இயல்பை

இழக்கிறது...

#இளையவேணிகிருஷ்ணா.

#இரவு கவிதை 🍁

நாள் 18/02/24.

ஞாயிற்றுக்கிழமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒரு நகரத்தின் பரபரப்புகளுக்கிடையே பறக்கும் பட்டாம்பூச்சியாக...

என் உயிர் சுவாசத்தின்  தீண்டலாக  நீ என்னோடு  ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின்  பரபரப்புக்குகளுக்கிடையே ...